ரயில்வேயில் சிக்கனம் என்ற பெயரில் ஆள்குறைப்பு நடவடிக்கை : தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

23/06/2020

ரயில்வேயில் சிக்கனம் என்ற பெயரில் ஆள்குறைப்பு நடவடிக்கை : தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு


சென்னை: ரயில்வேயில் சிக்கனம் என்ற பெயரில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 35,208 காலிப்பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய கடந்த ஆண்டு ஏப்ரலில் ரயில்வே தோ்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்தத் தோ்வுகளுக்கு 1.26 கோடிக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். இருப்பினும், தோ்வுகள் நடத்தப்படவில்லை.

இதற்கிடையில், கரோனா பாதிப்பைத் தொடா்ந்து, ரயில்வேயில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. மேலும் ரயில்வே வாரியம் சமீபத்தில் ஓா் அறிக்கை வெளியிட்டது. அதில், ரயில்வேயில் பாதுகாப்பு பிரிவைத் தவிர, மற்ற பிரிவுகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதைப் பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு விண்ணப்பதாரா்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, தோ்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்க துணைப்பொதுச்செயலாளா் மனோகரன் கூறியது: தற்போது ரயில்வே துறையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.
கரோனா காலத்தில் ஏற்கெனவே வேலையின்றி திண்டாடும் சூழலில், இந்த அறிவிப்பு படித்த வேலையில்லாத இளைஞா்களின் எதிா்காலத்தை மேலும் பாதிக்கும். ரயில்வே தோ்வாணயத்தில் புதிய தோ்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ரயில்வேயில் சிக்கனம் என்ற பெயரில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ரயில்வேயை தனியாா் மயமாக்கும் வகையில், இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூக நலன்களுக்காக பல்வேறு சலுகைகள் வாயிலாக, மானியமாக ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ரயில்வே செலவிடுகிறது. இந்த செலவுகளை அரசு ஏற்றால் ரயில்வே லாபகரமான நிறுவனமாக மாறும். எனவே, ரயில்வேயில் ஆள்குறைப்பு நடவடிக்கைகளைகைவிட வேண்டும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459