அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் உயர்வு. - ஆசிரியர் மலர்

Latest

19/05/2023

அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் உயர்வு.

 தமிழக அரசு பணியாளர்களுக்கு, தற்போது வழங்கப்படும் முன்பணம், 40 லட்சம் ரூபாய் என்பது, 50 லட்சம் ரூபாயாகவும், அகில இந்தியப் பணி அலுவலர்களுக்கு வழங்கப்படும், 60 லட்சம் ரூபாய் என்பது, 75 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதற்கான அரசாணையை, வீட்டு வசதித்துறை செயலர் அபூர்வா வெளியிட்டுள்ளார். கட்டுமான செலவு உயர்வால், இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும், புதிய விதிமுறைகளின்படி முன்பணம் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459