அரசாணை எண் 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/09/2020

அரசாணை எண் 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter

 


DR. ராம்பிரசாத் MBBS   என்பார் அரசணை (நிலை) எண்.37 ல் சில தெளிவுரை  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்  கோட்டிருந்தார் 

அதற்க்கான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்  பதில்



பார்வையில் காணும் மனுவின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. அம்மலுவில் தாங்கள் கோரியுள்ளவற்றிற்கு கீழ்கண்டவாறு தகவல் அளிக்கப்படுகிறது.


வ.எண் .1 குறித்து : அரசாணை ( நிலை ) எண் .37 , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் ( அவி- IV ) துறை , நாள்.10.03.2020 - ல் பத்தி 6 ( 1 ) -ன் படி அவ்வாணை ஆசிரியர்கள் உட்பட அனைத்து துறைகளில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


வ.எண் .2 குறித்து : பள்ளிக் கல்வி இயக்குநர் அரசாணை ( நிலை ) எண் .37 , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் ( அவி- IV ) துறை , நாள் . 10.03.2020 ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது. மேலும் , இத்துறையின் இசைவு பெறாமல் மேற்சொன்ன தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


வ.எண் .3 குறித்து : மேற்குறிப்பிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறையால் கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459