அரசுப் பள்ளிகளில் 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்தனர் - ஆசிரியர் மலர்

Latest

23/09/2020

அரசுப் பள்ளிகளில் 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்தனர்

 


தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர் களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த தேர்வுகளை எழுத பதிவு செய்திருந்த தனித் தேர்வர்களுக்கான தேர்வுகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஒருமாதமாக நடக்கிறது. இதில், தனியார் பள்ளிகளில் படித்து வந்த சுமார் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர் தற்போது அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459