தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி - ஆசிரியர் மலர்

Latest

24/04/2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 72 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது.
image
இதில் சென்னையில் மட்டும் 52 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் இதுவரை 866 பேர் குணமடைந்துள்ளனர். 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதுவரை 65,834 பேருக்கு பரிசோதனைகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459