1500 வகையான வைரஸ்கள்.. 15 வருட சோதனை.. “டேஞ்சர்” ஆராய்ச்சி செய்த வுஹன் லேப்.. வெளியான தகவல்கள் - ஆசிரியர் மலர்

Latest

22/04/2020

1500 வகையான வைரஸ்கள்.. 15 வருட சோதனை.. “டேஞ்சர்” ஆராய்ச்சி செய்த வுஹன் லேப்.. வெளியான தகவல்கள்


பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சர்ச்சையில் சிக்கி இருக்கும் வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி குறித்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சைகள் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில், சீனாவில் இருக்கும் வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி அதிக கவனம் ஈர்த்துள்ளது. இந்த வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்திருக்கும் என்று புகார்கள் வைக்கப்படுகிறது.
முதல் முதலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்ட வுஹன் மார்கெட்டில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில்தான் இந்த வைரஸ் ஆராய்ச்சி மையம் இருக்கிறது. இங்கிருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்து இருக்கலாம் என்று உலக நாடுகள் சந்தேகம் கொள்கிறது.
 முதலில் வுஹன் மைக்ரோபயலாஜி லேப் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.






தொடக்கம்

இந்த வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி 1956ல் தொடங்கப்பட்டது. முதலில் வுஹன் மைக்ரோபயலாஜி லேப் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
அதன்பின் 1962ல் இந்த ஆராய்ச்சி மையம் விரிவுபடுத்தப்பட்டது. 1970ல் பல்வேறு வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகளை செய்ய தொடங்கியது. அதன்பின்தான் இந்த வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் வந்தது.







ராணுவ கண்காணிப்பு

ராணுவ கண்காணிப்பு

அந்நாட்டு அறிவியல் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இந்த ஆராய்ச்சி மையம் இருக்கிறது
 ஆனாலும் ராணுவம் நேரடியாக இந்த ஆராய்ச்சி மையத்தை கட்டுப்படுத்தி வருகிறது. அந்நாட்டு பாதுகாப்பு துறைக்கு உதவும் வகையில்
முக்கியமான வைரஸ் ஆராய்ச்சிகளை இந்த மையம் செய்து இருக்கிறது.முக்கியமான,மிக தீவிரமான வைரஸ் குறித்தும் இந்த ஆராய்ச்சி மையம் சோதனை செய்துள்ளது.







1500 வகையான வைரஸ்

1500 வகையான வைரஸ்

ஆசியாவில் அதிகமான வைரஸ்களை வைத்து ஆராய்ச்சி செய்யும் ஒரே ஆராய்ச்சி மையம் வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மையம்தான். இங்கு மொத்தம் 1500 வகையான வைரஸ்கள் வைத்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதை ஏதோ ஒரு கான்ஸ்பிரசி தியரி நபர் சொல்லவில்லை.
 வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் இணைய பக்கமே.. நாங்கள் 1500 வகையான வைரஸ்களை சோதனை செய்கிறோம் என்று கூறியுள்ளது.







முக்கியமான சோதனை கூடம்

முக்கியமான சோதனை கூடம்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அங்கு இருக்கும் பி4 (Class 4 pathogens) சோதனை கூடம்தான்.
ve="true"> ஆசியாவிலேயே அதிக பாதுகாப்பு கொண்ட, காற்று கூட வெளியேற முடியாத மிக அதிக சக்தி வாய்ந்த சோதனை கூடம் இதுதான். இங்குதான் உலகின் மிக மோசமான வைரஸ்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இங்கு எபோலா தொடங்கி நிப்பா வைரஸ் வரை சோதனை செய்யப்பட்டு வருகிறது.
2018ல் மிக தீவிரமான சோதனைகளை செய்ய தொடங்கியது.






தீவிரமான சோதனை

தீவிரமான சோதனை

42 மில்லியன் டாலர் செலவில் 2015ல் இருந்த ஆராய்ச்சி மையம் விரிவுபடுத்தப்பட்டது. 2018ல் மிக தீவிரமான சோதனைகளை செய்ய தொடங்கியது.
ve="true"> அதற்கு முன் 2013ல் பி3 சோதனை கூடம் மூலம் வைரஸ் ஆராய்ச்சிகளை செய்து வந்தது. இங்கு 2005ல் இருந்தே கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. 2004ல் சார்ஸ் உருவாக காரணமான கொரோனா குடும்பத்து வைரஸ்களை இங்கு வைத்துதான் சோதனை செய்தனர்.







கொரோனா சோதனையை

கொரோனா சோதனையை


ஆம் கொரோனா வைரஸ் குடும்பம் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மிக பாதுகாப்பாக வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி கடந்த 15 வருடங்களாக செய்து வருகிறது.அதிலும் கடந்த 3 வருடங்களில் மிக முக்கியமான ஆராய்ச்சி முடிவுகள், ஆய்வு கட்டுரைகளை இந்த வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனம் வெளியிட்டது.
 இங்கு வௌவால்கள் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது.







வௌவால் சோதனை

வௌவால் சோதனை

உலகில் இருக்கும் பல்வேறு வகையான வௌவால்கள் இங்கு தீவிரமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது
. வௌவால்களில் இருக்கும் பல டேஞ்சரான வைரஸ்கள் குறித்து இங்கு மிக தீவிரமான சோதனைகளை அந்நாட்டு வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மையம் செய்துள்ளது. நமது உடலில் வைரஸ் கிருமிகளால் தாக்கவே முடியாத செல்களை கூட தாக்கும் வகையில் இங்கு சில செயற்கையான வைரஸ்கள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 இங்கிருந்து வைரஸ் கிருமிகள் வெளியாக வாய்ப்புள்ளது என்று "அமெரிக்கா எச்சரிக்கை"






அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்கா எச்சரிக்கை

2018ல் இந்த வுஹன் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி பாதுகாப்பானதாக இல்லை
.இங்கிருந்து வைரஸ் கிருமிகள் வெளியாக வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது
. ஆனால் அப்போதே இந்த புகாரை சீனா மறுத்து இருந்தது. ஆனால் தற்போது அங்கிருந்து கொரோனா வைரஸ் லீக்காகி இருக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா புகார் அளிக்க தொடங்கி உள்ளது.
 அவர் வெளியே சென்று மக்களுக்கு கொரோனா வைரஸை பரப்பி உள்ளார்...."



கசிந்து இருக்கலாம்

கசிந்து இருக்கலாம்

இந்த ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஒரு நபருக்குதான் முதலில் கொரோனா வைரஸ் தாக்கியது. அவர் வெளியே சென்று மக்களுக்கு கொரோனா வைரஸை பரப்பி உள்ளார். இந்த வைரஸ் கசிந்து இருக்கலாம்.
இந்த வைரஸ் தாக்குதல் தெரிந்தோ, தெரியாமலோ சீனா மூலம் பரப்பப்பட்டு உள்ளது என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் சந்தேகம் எழுப்ப தொடங்கி உள்ளது. ஆனால் இதுவரை இது தொடர்பான எந்த விதமான உண்மையும் , ஆதாரமும் வெளியாகவில்லை.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459