TRB தேர்வு விதிமுறைகளை தனியார் பள்ளிகளில் பின்பற்றக்கோரி வழக்கு - ஆசிரியர் மலர்

Latest

22/09/2021

TRB தேர்வு விதிமுறைகளை தனியார் பள்ளிகளில் பின்பற்றக்கோரி வழக்கு

தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்பான வழக்கில், பள்ளி கல்வித்துறை பதில் அளிக்கக் கூறி மதுரை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில் சுரேஷ்குமார் கூறி இருந்ததாது:

தமிழக பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக தமிழக அரசு ஆணை ஒன்றை வெளியிட்டது. அதனடிப்படையில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் ஒரே பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

ஆனால், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெவ்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு திறம்பட கற்பிக்க இயலாத நிலை உருவாகும்.
ஆகவே தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் விதிகள் பொருந்தும் என உத்தரவிட்டு அதனை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுரேஷ்குமார் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி முரளிசங்கர் அமர்வு, இதுகுறித்து பள்ளி கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459