தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளை, பணிநிரந்தரம் செய்யவேண்டும் - ஆசிரியர் மலர்

Latest

23/12/2020

தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளை, பணிநிரந்தரம் செய்யவேண்டும்

 Government-should-retain-disabled-persons-who-have-been-working-temporarily-for-8-years--Dinakaran

தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளை, பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியிருக்கிறார்.டிடிவி.தினகரன் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில் “தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்களாக பணி நிரந்தரம்கோரி போராடி வருகிறார்கள். கடவுளின் குழந்தைகளான அவர்களிடமும் ஆதாயமடைவது பற்றி ஆட்சியாளர்கள் யோசிக்காமல், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதைக் கடமையாகக் கருத வேண்டும்.

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459