1.4 கோடி பேர் எழுதும் ரெயில்வே தேர்வு வருகிற 15ந்தேதி தொடக்கம் : 1 4 லட்சம் ரயில்வே பணியாளர் போட்டித் தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகள் வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

13/12/2020

1.4 கோடி பேர் எழுதும் ரெயில்வே தேர்வு வருகிற 15ந்தேதி தொடக்கம் : 1 4 லட்சம் ரயில்வே பணியாளர் போட்டித் தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகள் வெளியீடு.

 


1.40 கோடி பேர் எழுதும் ரெயில்வே தேர்வு முக்கிய நகரங்களில் வருகிற 15ந்தேதி முதல் 3 கட்டங்களாக நடக்கிறது.கோப்பு படம்.

இந்திய ரெயில்வேயில் மிகப்பெரிய அளவிலான ஆட்சேர்ப்பு நடவடிக்கை வருகிற 15ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரியதில் நாடு முழுவதிலும் இருந்து 1 கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தேர்வு நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் 15ந்தேதி முதல் 3 கட்டங்களாக நடக்கிறது.
கொரோனா காலத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் தேர்வில் பங்கேற்பதால் சமூக விலகல் மற்றும் சுகாதார நடைமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று தேர்வு பணியாளர்களுக்கு ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459