அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயருமா ? - ஆசிரியர் மலர்

Latest

20/10/2020

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயருமா ?


 புதுடில்லி: நுகர்வோர் தேவையை அதிகரித்து, பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், ஊழியர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வட்டி இல்லா கடனை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்த திட்டத்தை, அடுத்த ஆண்டு மார்ச் வரை, மத்திய அரசு ஊழியர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன், தொழிற்சாலை ஊழியர்களுக்கான, இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படை ஆண்டை, 2016 ஆக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அப்படி மாற்றப்பட்டால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459