உத்திரப் பிரதேசத்தில் தேசியக் கொடி ஏற்றாத பள்ளி ஆசிரியர்கள் இடைநீக்கம் - ஆசிரியர் மலர்

Latest

16/08/2020

உத்திரப் பிரதேசத்தில் தேசியக் கொடி ஏற்றாத பள்ளி ஆசிரியர்கள் இடைநீக்கம்


கோப்புப்படம்

பண்டா: உத்தரப்பிரதேசத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தாததால் இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. இது குறித்து பேசிய அடிப்படை கல்வி அலுவலர் ஹரிஷ் சந்திரநாத், கொடி ஏற்றாத பள்ளி தலைமை ஆசிரியர் அஹிவார், உதவி ஆசிரியை கங்கா பூஜா ஆகியோர் உடனடி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மண்டல கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459