மறுதேர்வு எழுதுபவர்களுக்கு ரிசல்ட் எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

16/07/2020

மறுதேர்வு எழுதுபவர்களுக்கு ரிசல்ட் எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


சென்னை,
தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெற  உள்ள மறு தேர்வு எழுதும் பிளஸ்-டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மறுதேர்வு முடிந்த பின், அனைத்து பாடங்களுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி மற்றும் வழிமுறை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.  
இதற்கிடையே,  தமிழகத்தில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ள பிளஸ்டூ மறுத்தேர்வு முடிந்தவுடன், விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையனும் உறுதி அளித்துள்ளார்.  

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459