இன்றைய ராசிபலன் - ஆசிரியர் மலர்

Latest

13/06/2020

இன்றைய ராசிபலன்


மேஷம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் கூடு தலாக இருக்கும்
. சிவபெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்க நன்மைகள் அதிகரிக் கும்.


ரிஷபம்

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்குப் புதிய ஆடைகள் வாங்கவேண்டிய தேவை ஏற்படலாம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.


மிதுனம்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும்.
வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். அம்பிகையை தியானித்து வழிபட பல வகைகளிலும் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.


கடகம்

இன்று எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். விநாயகரை வழிபடுவதன் மூலம் அனுகூலப் பலன் களைப் பெறலாம்.


சிம்மம்

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் நீங்கும்.


கன்னி


தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் விற்பனையை அதிகரிப்பதில் பணியாளர்கள் உற்சாகம் காட்டுவார்கள். மகாலட்சுமி வழிபாடு நல்ல மாற்றங் களை ஏற்படுத்தும்.


துலாம்

பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.
பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். இன்று அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.


விருச்சிகம்

மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். தெளிவாகச் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கூடுதலாக நடைபெறும்.


தனுசு

எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்
. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். பிற்பகலுக்கு மேல் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபட சிரமங்கள் நீங்கும்.


மகரம்

மகிழ்ச்சியான நாள். குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்பதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். உங்கள் முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.


கும்பம்


தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம்.
நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். பொறுமை அவசியம். ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.


மீனம்

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். நடக்கவும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவும் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இன்று விநாயகரை வழிபட முயற்சிகள் சாதகமாக நிறைவேறும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459