ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 17 மருத்துவா்களுக்கு கரோனா தொற்று உறுதி - ஆசிரியர் மலர்

Latest

21/05/2020

ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 17 மருத்துவா்களுக்கு கரோனா தொற்று உறுதி


சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 17 மருத்துவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோன்று செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் சிலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு
மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.
மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், போலீஸாா், ஊடகத்தினா் என கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்களத்தில் இருந்து பணியாற்றும் பலருக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது.
அதில் மருத்துவா்களும், செவிலியா்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. அந்த வரிசையில், ஸ்டான்லி மருத்துவா்கள் 17 போ் கடந்த ஒரு வாரத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.
இதேபோன்று சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவா்களில் பெரும்பாலானோா் கரோனா பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459