தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஆசிரியர் மலர்

Latest

27/04/2020

தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


சென்னை:
கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்
வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. என்றாலும் தினந்தோறும் சராசரியாக ஐம்பது பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வரும் நிலை உள்ளது.
நேற்று 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 1885-ஆக அதிகரித்தது. அதேவேளையில் 1020 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில் 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1101 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459