IIT மற்றும் IIIT ஆகியவற்றில் கல்விக்கட்டணம் உயர்த்தக்கூடாது.-.மத்திய அரசு - ஆசிரியர் மலர்

Latest

27/04/2020

IIT மற்றும் IIIT ஆகியவற்றில் கல்விக்கட்டணம் உயர்த்தக்கூடாது.-.மத்திய அரசு


வரும் கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் உயர்த்தக்கூடாது என்று நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.க்கள் மற்றும் ஐ.ஐ.ஐ.டி-க்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில்,
மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதால் வரும் கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று அனைத்து ஐ.ஐ.டி.கள் மற்றும் ஐ.ஐ.ஐ.டி.க்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தி உள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிற உயர்கல்வி நிறுவனங்களுக்கும் கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என அறிவுறுத்தி விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459