உயர்நீதிமன்றத்தில் 550 குரூப்-பி வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? - ஆசிரியர் மலர்

Latest

03/03/2023

உயர்நீதிமன்றத்தில் 550 குரூப்-பி வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?


 பாட்னா உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் (குரூப்-பி) பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Assistant (Group-B Post)


காலியிடங்கள்: 550 


சம்பளம்: ரூ.44,900 - ரூ.1,42,400


வயது வரம்பு: 1.1.2023 தேதியின் படி 18 முதல் 37 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் குறைந்தது 6 மாத கால கம்பியூட்டர் அப்ளிகேசன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: கொள்குறிவகை கேள்விகளைக் கொண்ட முதற்கட்டத்தேர்வு, விரிவான விடையளிக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்ட இரண்டாம் கட்டத்தேர்வு, கம்பியூட்டர் திறனறிவுத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


முதற்கட்டத்தேர்வு 30.04.2023 அன்று பிகாரில் நடைபெறும்.


விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.1200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:  www.patnahighcourt.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  7.3.2023


மேலும் விவரங்கள் அறிய  இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459