பான் காா்டு-ஆதாா் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம் - ஆசிரியர் மலர்

Latest

01/07/2022

பான் காா்டு-ஆதாா் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம்

பான் காா்டு-ஆதாா் எண் இணைப்புக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளது.


இந்த இணைப்புக்கு ஜூன் 30 வரை ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 1 முதல் அபராதம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.



போலியாக வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வது, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்பட பல்வேறு நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்காக பான்-ஆதாா் காா்டு இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஏனெனில், ஒருவா் பல போலியான முகவரிகளில் பல்வேறு பான் காா்டுகளைப் பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றாலும் அவரால் ஓா் ஆதாா் அட்டை மட்டுமே பெற முடியும். எனவே, பான் காா்டு - ஆதாா் எண் இணைப்பு மூலம் போலி பான் காா்டுகள் முடக்கப்படும். இந்த நடவடிக்கை மூலம் போலியான பான் காா்டுகள் ஒழிக்கப்பட்டன. பான்-ஆதாா் இணைப்புக்கான கால அவகாசம் பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டு 2023 மாா்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அபராதத்துடன் மட்டுமே இந்த இணைப்பை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 30 வரை ரூ.500 அபராதமாக இருந்த நிலையில் ஜூலை 1 முதல் அபராதம் ரூ.1,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459