எண்ணும் எழுத்தும் திட்டம் - முதல்வர் இன்று தொடங்கிவைக்கிறார் - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/06/2022

எண்ணும் எழுத்தும் திட்டம் - முதல்வர் இன்று தொடங்கிவைக்கிறார்

அரசுப்பள்ளிகளில் 1-5வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிவைக்கிறார்.

மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது.

திட்டம் தொடர்பான காணொளி , கைபேசி செயலி , திட்டப்பாடல் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.

ஆசிரியர் கையேடு , சான்றிதழ் . கற்றல் கற்பித்தல் உபகரணம் , புத்தகங்கள் ஆகியவற்றையும் முதல்வர் வழங்குகிறார்.

எண்ணும்எழுத்தும் திட்டத்திற்காக 30,000 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி தரப்பட்டது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459