அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம். - ஆசிரியர் மலர்

Latest

22/06/2022

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு: 

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு சேர்வதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவங்கும். ஜூலை 7 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர்,  http://www.tngasa.in/ , http://www.tngasa.org/ ஆகிய இணையதளங்கள் வழியே, விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும். கல்லுாரிகளின் விபரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணமாக, தேர்வு செய்யும் ஒவ்வொரு கல்லுாரிக்கும், 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459