அகவிலைப்படியும் தமிழக அரசின் மௌனமும். - ஆசிரியர் மலர்

Latest

31/05/2022

அகவிலைப்படியும் தமிழக அரசின் மௌனமும்.

 மீண்டும் 1970-78 காலக்கட்டத்தை நோக்கியா?

இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் பெறுபவர்கள் தமிழ்நாட்டு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தான் என ஒன்றிய அரசின் எட்டாவது நிதிக்குழு 26.6.1982ல்சுட்டிக்காட்டிய அவலநிலையை மீண்டும் உருவாக்க தமிழக அரசு திட்டமிடுகிறதா?

 1970-78 காலகட்டத்தில் 120 விலைவாசிப் புள்ளிகளுக்கு ஒன்றிய அரசு 15 தவணை அகவிலைப்படியை வழங்கிய போது தமிழக அரசு 7தவணை அகவிலைப்படியை -அதற்கும்கூட உச்சவரம்பு விதித்து- 8 தவணை அகவிலைப்படியை வஞ்சித்து அநீதி இப்போதும் தொடரப்போகிறதா?

 அரசுஊழியர்-ஆசிரியர் பேரினமே, இனியும் மௌனம் சரிதானா?


_செ.நடேசன்.

மேனாள் பொதுச்செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459