இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயிலும் மாணவ மாணவியரிடம் களப்பரிசோதனை மேற்கொள்ளுதல் சார்பாக - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரது செயல்முறைகள். - ஆசிரியர் மலர்

Latest

19/01/2022

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயிலும் மாணவ மாணவியரிடம் களப்பரிசோதனை மேற்கொள்ளுதல் சார்பாக - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரது செயல்முறைகள்.

எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்திற்கான அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பாடப்பொருளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

உருவாக்கப்பட்ட பாடத்தொகுப்பினுள் ஒன்றை இணைப்பில் உள்ள மாவட்டங்களில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையங்களில் 1 முதல் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம் 19.01.2022 முதல் 24.01.2022 வரை 5 நாட்கள் களப்பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 இக்களப்பரிசோதனை மேற்கொள்ளபடவுள்ள மையங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 23.12.2021 மற்றும் 27.12.2021 அன்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459