மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! கல்லூரிகளில் ஜனவரி மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கடந்த செப்டம்பர் மாதம் முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்தில், 121 பேருக்கு ஒமைக்ரான் பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் கொரோனா தினசரி பாதிப்பும் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக, பள்ளி, கல்லூரிகளை மீண்டும் மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சனி, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு: வெளியான புதிய தகவல்! இந்நிலையில் இன்று, செய்தியாளர்களிடம் பேசிய திமுகவைச் சேர்ந்த தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஜனவரி மாதம் நடைபெற இருந்த தேர்வுகளை ஒத்தி வைக்கப்படுகிறது என்றும், கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராவதற்காக விடுமுறை ( Study Holiday ) அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதால், கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
05/01/2022
New
கல்லூரிகளில் ஜனவரி மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பு.
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
College zone
Labels:
College zone
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment