TRUST - தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு , தேர்வு தேதியும் மாற்றம். - ஆசிரியர் மலர்

Latest

30/12/2021

TRUST - தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு , தேர்வு தேதியும் மாற்றம்.

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு (TRUST) விண்ணப்பிக்க 20.01.2022 வரை கால நீட்டிப்பு செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு. தற்போது , பல பள்ளிகளிலிருந்து தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் தேவை என்ற தகவல் பெறப்பட்டதைத் தொடர்ந்து , தேர்வர்களின் நலன் கருதி கீழ்க்குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வழங்குதல் மற்றும் பதிவேற்றம் செய்தல் குறித்தான் விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது . விண்ணப்பிக்க கால அவகாச நீட்டிப்பினைத் தொடர்ந்து 30.01.2022 அன்று நடைபெறவிருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு 20.02.2022 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விவரங்களை அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கவும் மற்றும் தலைமையாசிரியர்களின் வாயிலாக ஏற்கெனவே இத்தேர்வினுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கும் , தற்பொழுது விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கும் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது . விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் பதிவேற்றம் செய்தல் குறித்த விவரங்களை கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459