28.12.2021 அன்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

24/12/2021

28.12.2021 அன்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை , தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் எண்ணிக்கை விவரம் ( as per EMIS ) உள்ள படிவங்கள் ( 1 மற்றும் 2 ) இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . இதனை சரிபார்த்து படிவம் 3 - ல் பாடவாரியாக மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் படிவம் 4 - ல் அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் பணிவரன்முறை செய்யப்பட்டு பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் எண்ணிக்கை பாடவாரியாகவும் மற்றும் கணினி பயிற்றுநர்கள் நிலை -1 , 2 பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலர் கையொப்பமிட்டு 28.12.2021 நாளன்று நடைபெறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தின்போது நேரில் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459