தமிழ்நாடு - அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

09/10/2021

தமிழ்நாடு - அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு


 தமிழ்நாடு - அஞ்சல் துறையில் தபால்காரர் /அஞ்சல் காவலர் பணியிடங்கள் - 318 Vacancies 

 Last Date: 20.10.2021

அஞ்சல் துறை .லிருந்து காலியாக உள்ள தபால்காரர் /அஞ்சல் காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20.10.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அஞ்சல் துறை 

பணியின் பெயர்: தபால்காரர் /அஞ்சல் காவலர் 

மொத்த பணியிடங்கள்: 318

தகுதி: தபால்காரர் / அஞ்சல் காவலர் போன்ற காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பில், குறிப்பிட்ட பிரிவினருக்கான வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பிரிவினருக்கும் 01.01.2021ன்படி அதிகபட்ச வயது வரம்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், UR பிரிவினருக்கு அதிகபட்சம் 50, OBC பிரிவினருக்கு அதிகபட்சம் 53, SC/ST பிரிவினருக்கு அதிகபட்சம் 55 வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சியில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 3 தாள்கள் அடங்கிய தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் பெற்று, உரிய ஆவணங்களுடன் அதை பூா்த்தி செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு 20.10.2021குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2021

Notification for அஞ்சல் துறை 2021:Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459