பள்ளி திறப்பு (01.09.2021)க்குப் பின்னர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

11/09/2021

பள்ளி திறப்பு (01.09.2021)க்குப் பின்னர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 கொரோனா பெருந்தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

IMG_20210910_192028


 9 , 10 , 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகளுக்கு மட்டும் அனைத்து வகைப்பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவ , மாணவியர் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பின் , அது குறித்த விவரங்களை அரசிற்கு அனுப்பும் வகையில் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்து இணை இயக்குநரின் ( தொழிற்கல்வி ) மின்னஞ்சல் முகவரி மற்றும் Google Sheet- ற்கு ஒவ்வொரு நாளும் பிற்பகல் 1 மணிக்குள் தொடர்ந்து அனுப்புதல் வேண்டும் என அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது . மேலும் 01.09.2021 முதல் 06.09.2021 முடிய உள்ள காலத்திற்கான விவரங்கள் இன்றே அனுப்பப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459