அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு - தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். - ஆசிரியர் மலர்

Latest

04/08/2021

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு - தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

 

பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை, மீன்வளம் போன்ற தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு - அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

IMG-20210804-WA0011

IMG-20210804-WA0012


• கடந்த ஆண்டுகளில் பொறியியல் , வேளாண்மை , கால்நடை , மீன்வளம் , சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால் , அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும் , அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து , உரிய தீர்வுகளை , பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வு பெற்ற மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு . த.முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு , அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது. 


அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று , அதனைச் செயல்படுத்தும் விதமாக , மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப்போன்றே , அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459