AISHE ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன ? - ஆசிரியர் மலர்

Latest

12/06/2021

AISHE ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன ?

 


தமிழ்நாட்டில் உள்ள சுமார் 220 பொறியியல் கல்லூரிகளில், 110-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நல்ல உள்கட்டமைப்பு உள்ளது. இந்தக் கல்லூரிகளில் பலதரப்பட்ட புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த வாய்ப்பிருக்கிறது.


முதுகலை படிப்புகளிலும், பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, 1.8 லட்சத்திலிருந்து 1.77 லட்சமாக. இருப்பினும், பொறியியல் ஆய்வுப் படிப்புகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. அதிக எண்ணிக்கையிலான பொறியியல் முனைவர் பட்டங்கள் (41,869 முதல் 52,478 வரை) உருவாகி வருகின்றன.


உலகத் தரவரிசையில் இந்திய நிறுவனங்கள் போட்டியிடும் நேரத்தில், நாட்டில் கல்வியின் சர்வதேசமயமாக்கலில் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை. வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் ஓரளவே முன்னேற்றம் கண்டுள்ளோம். 2018-19ல் 47,427, 2019-20ல் 49,348… இப்படி. வெளிநாட்டு மாணவர்களில் அதிக பங்கு அண்டை நாடுகளிலிருந்தே வருகிறது. இதில் நேபாளம் 28.1%, ஆப்கானிஸ்தான் 9.1%, வங்கதேசம் 4.6%.


1,019 பல்கலைக்கழகங்கள், 39,955 கல்லூரிகள் மற்றும் 9,599 முழுமையான நிறுவனங்களின் பதில்களின் அடிப்படையில் AISHE ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன. நாட்டில் மொத்தம் 1,043 பல்கலைக்கழகங்கள், 42,343 கல்லூரிகள் மற்றும் 11,779 தனி கல்வி நிறுவனங்கள் உள்ளன.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459