தேர்தல் பயிற்சிக்கு வர மறுத்த 17 ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு - ஆசிரியர் மலர்

Latest

18/03/2021

தேர்தல் பயிற்சிக்கு வர மறுத்த 17 ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு

 


அசாம் மாநிலத்தில் தேர்தல் பணிக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறார்கள். ஆனால் பல ஆசிரியர்கள் தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி தேர்தல் பணிக்கு வர மறுத்துவிட்டார்கள் . அவர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழையும் மேல் அதிகாரிகளிடம் வழங்கினார்கள். இவ்வாறு மருத்துவ சான்றிதழ் அளித்தது சரியானது தானா ? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பல ஆசிரியர்கள் தவறான முறையில் சான்றிதழ் பெற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 17 ஆசிரியர்களை கட்டாய ஓய்வில் ( வி.ஆர் . எஸ் . ) செல்லும் படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 


அதில் தேர்தல் பணி ஆற்ற முடியாத நிலையில் உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் , நீங்கள் ஆசிரியர் பணியையும் சரியாக செய்ய முடியாது. எனவே கட்டாய ஒய்வில் சென்று விடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
IMG-20210318-WA0017

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459