வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் பயிற்சி 03.04.2021 அன்று நடைபெறும் - CEO Proceedings. - ஆசிரியர் மலர்

Latest

31/03/2021

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் பயிற்சி 03.04.2021 அன்று நடைபெறும் - CEO Proceedings.

 

IMG_20210331_185820

நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 ல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் பயிற்சி வகுப்பானது ( 2nd Repeat Training Class ) , வருகின்ற 03.04.2021 ( சனிக் கிழமை ) அன்று காலை 9.30 மணிக்கு , அந்தந்த சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பயிற்சி மையங்களில் ( அதாவது கடந்த 26.03.2021 அன்று நடைபெற்ற அதே பயிற்சி மையத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பிற்காக தனியாக தகவல் ஆணை அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி 03.04.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட திருப்புதல் பயிற்சி ( 2nd Repeat Training Cass ) வகுப்பிற்கு வாக்குச்சாவடி அலுவலர்களை , மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி , அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள ( instructed to ensure that there are no absentees on 03.04.2021 ) அறிவுறுத்துமாறு சம்மந்தப்பட்ட அலுவலக தலைவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 


மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள்மீது , தேர்தல் நடத்தை விதிகளின்படி , உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வகுப்புக்கு 30 மணி நேரம்

    ReplyDelete
  2. தெரிந்து செய்கிறார்களா அல்லது தெரியாமல் செய்கிறார்களா என்று தான் தெரியவில்லை. சொல்லி தருவது நோக்கமா அல்லது அலைகழிப்பது நோக்கமா என்று புரிய வில்லை

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459