அடுத்த 24 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் கனமழை - ஆசிரியர் மலர்

Latest

13/01/2021

அடுத்த 24 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் கனமழை

 


அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.  

 

மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு செய்தியை அறிய இங்கே கிளிக் செய்யவும்


இந்த 2 அணைகளும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்றும் கனமழை பெய்தது. 

 

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

 

குமரிக்கடல் பகுதியில் நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்றும்,  மேலடுக்கு சுழற்சியால் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

 

இன்று இரவுக்கு மேல் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 

நாளை பொங்கல் கொண்டாட உள்ள நிலையில், கனமழை அறிவிப்பால், நெல்லை, தூத்துக்குடி மாநகர மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

 

குற்றாலத்தில் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவில் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  

 

கனமழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459