மருத்துவ கலந்தாய்வு பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் மலர்

Latest

23/11/2020

மருத்துவ கலந்தாய்வு பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு

 


சென்னை,

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது.  மருத்துவ படிப்புகளுக்கான இந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு டிசம்பர் 4ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில், 4 ஆயிரத்து 944 இடங்களுக்கு, 5 ஆயிரத்து 441 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த மருத்துவப் படிப்புகளுக்கான
பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாத வண்ணம் நாளை(24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 2020-2021 வரும்( 30.11.2020) திங்கட்கிழமை அன்று நடைபெறும் வகையில் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்த விரிவான அறிக்கை மருத்துவக்கல்வி தேர்வு குழு இணையதளத்தில் வெளியிப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459