சட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

25/10/2020

சட்டப் படிப்பு : விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு


 அம்பேத்கர் சட்டப் பல்கலையில், மூன்றாண்டு படிப்புக்கான விண்ணப்ப பதிவுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


பல்கலையின் பொறுப்பு பதிவாளர், ரஞ்சித் உம்மன் ஆபிரஹாம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் இணைப்பில் உள்ள, அரசு சட்ட கல்லுாரிகள், பல்கலை வளாகத்தில் செயல்படும் சீர்மிகு சட்டப் பள்ளி ஆகியவற்றில், மூன்றாண்டு எல்.எல்.பி., மற்றும் எல்.எல்.பி., 'ஹானர்ஸ்' படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப் படு கின்றன.இதற்கான கடைசி தேதி நவம்பர், 18 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே, இதுவரை பெறாதவர்கள், விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459