2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையிலான தேசிய மாதிரி சர்வேயை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 8,097 கிராமங்களில் உள்ள 64,519 வீடுகள், 6,188 மண்டலங்களில் உள்ள 49,238 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளா 96.2 சதவீதத்துடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. டில்லி 88.7 சதவீதத்துடன் 2வது இடமும், உத்தரகண்ட் 87.6 சதவீதத்துடன் 3வது இடமும் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்கள் முறையே, ஹிமாச்சல பிரதேசம் (86.6%), அசாம் (85.9%), மஹாராஷ்டிரா (84.8%), பஞ்சாப் (83.7%) ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.
தமிழகத்துக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில், கிராமப்புறத்தில் 77.5% மக்களும், நகரில் 89% மக்களும் கல்வியறிவு பெற்று, ஒட்டு மொத்தமாக 82.9% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். 87.9% ஆண்கள், 77.9% பெண்கள் தமிழகத்தில் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஆந்திரா 66.4% கல்வியறிவு பெற்றவர்களுடன் கடைசி இடம் பிடித்துள்ளது.
மொத்தத்தில் இந்தியாவில் 77.7% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 84.7%; பெண்கள் 70.3% பேர். கிராமப்புறங்களில் 73.5% பேரும், நகர்ப்புறங்களில் 87.7% பேரும் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment