தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/09/2020

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


Chance of heavy rain in 6 districts including Kanchipuram in Tamil Nadu
தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கின்றது.
இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்
திருத்தணி 9 செ.மீ மழையும், திருப்பத்தூர், சின்னக்கல்லார் தலா 7 செ.மீ மழையும், வால்பாறை, திருவாலங்காடு தலா 5 செ.மீ மழையும், செம்பரம்பாக்கம், மேட்டூர் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459