நீட் தேர்வு: அரியலூர் மாணவர் தற்கொலை - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/09/2020

நீட் தேர்வு: அரியலூர் மாணவர் தற்கொலை


நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ்(19).  இவர் நீட் தேர்விற்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த நிலையில், வரும் 13 ஆம் தேதி நீட் தேர்வு என்பதால் தேர்வில் தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து செந்துறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459