தமிழகத்தில் சில மாதங்களுக்கு ரெட் அலர்ட் - ஆசிரியர் மலர்

Latest

07/08/2020

தமிழகத்தில் சில மாதங்களுக்கு ரெட் அலர்ட்


நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி,கோவை,தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்தக் காற்றுடன் கன மழையும், திருநெல்வேலி,தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி,கோவை, தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்தக் காற்றுடன் கூடிய அதிக கனமழையும் பெய்யும் என்பதால் அங்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459