தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக சுகாதாரத்துறை தினசரி கொரோனா கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் மேலும் 5, 880 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 வது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
சென்னையில் மேலும் 984 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2 மாதங்களுக்கு பின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,896 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,06,103லிருந்து 1,07,109 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் 3-ம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்னிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் 50 வயதுக்கு உட்பட்ட 13 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் வேறு நோய் பாதிப்பு இல்லாத 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் 78 பேர், தனியார் மருத்துவமனைகளில் 41 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு – 4,690 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 52,759 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,21,087-ல் இருந்து 2,27,575 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment