கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் வேலை இழந்தவர்களுக்காக மத்திய, மாநில அரசுகளும், தனியார் துறை அமைப்புகளும் அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதை செய்தி வாயிலாக தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில்,
இன்றைய வேலைவாய்ப்பு குறித்து பின்வருமாறு காண்போம். மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் அக்கவுண்டண்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட ஊதியத்துடன் கூடிய அப்ரண்டீஸ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில் மொத்த பணியிடங்கள் 4,182 வயது வரம்பு: 18 முதல் 24 வரை இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி இன்று தான் (ஆகஸ்ட் 17). விண்ணப்பிக்க உடனடியாக http://www.ongcindia.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்
No comments:
Post a Comment