தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஆசிரியர் மலர்

Latest

26/08/2020

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி



தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 362 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 606 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 060 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459