மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம் - ஆசிரியர் மலர்

Latest

01/07/2020

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம்


சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 01) அதிகபட்சமாக சென்னையில் 2,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 60,533 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஓரிரு நாட்களாக சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 3,882 பேரில் சென்னையில் மட்டும் 2,182 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது
. இதன் மூலம் சென்னையில் மட்டும் 60,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 297 பேருக்கும், செங்கல்பட்டில் 226 பேருக்கும், சேலத்தில் 178 பேருக்கும், திருவள்ளூரில் 147 பேருக்கும், ராமநாதபுரத்தில் 111 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று சென்னையில் 41 பேரும், மதுரையில் 7 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், ராநாதபுரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தலா 2 பேரும், தேனி, புதுக்கோட்டை, விருதுநகர், கரூரில் தலா ஒருவரும் என 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459