தனியார் உதவியுடன் காவலர் தேர்வை ஆன்-லைனில் நடத்த திட்டம் - ஆசிரியர் மலர்

Latest

26/07/2020

தனியார் உதவியுடன் காவலர் தேர்வை ஆன்-லைனில் நடத்த திட்டம்


சென்னை,
தனியார் உதவியுடன் காவலர் தேர்வை ஆன்-லைனில் நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
ஆன்லைனில் தேர்வு நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ஆணையர்கள், காவலர்களிடம் கருத்துக் கேட்கப்படுவதாகவும்  கிரேடு-2 காவலர், கிரேடு-2 சிறை வார்டன், உதவி ஆய்வாளர் தேர்வுகளை நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  
தலா 50 காவலர்களிடன் கருத்து கேட்டு 31ஆம் தேதிக்குள் பதில் அனுப்புமாறு மாவட்ட எஸ்.பி.களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459