தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு புதிய தலைவர் நியமனம் - ஆசிரியர் மலர்

Latest

03/07/2020

தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு புதிய தலைவர் நியமனம்

சென்னை,
தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவராக ஒய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

“தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவராக ஒய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவி காலம் மூன்றாண்டு காலம் ஆகும். தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவராக இருந்த மாசிலாமணியின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.
இதனையடுத்து புதிய தலைவராக ஒய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனை நியமனம் செய்யப்பட்டு உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459