பகுதி நேரமாக எம்.பில் முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் - தணிக்கை அலுவலகத்திற்கு உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

24/07/2020

பகுதி நேரமாக எம்.பில் முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் - தணிக்கை அலுவலகத்திற்கு உத்தரவு.


பகுதி நேரமாக எம்பில் முடித்த ஆசிரியர்களுக்கு இரண் டாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து , தணிக்கை அலுவலகத்திற்கு உத்தர விட்டப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசு பள்ளிக ளில் பணி புரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டம் படித்தால் ஒரு ஊக்க ஊதியமும் , எம்பில் அல்லது எம்எட் படித்தால் இரண்டாவது ஊக்க ஊதியமும் வழங்கப்படுகிறது.

கடந்த 2008 ம் ஆண்டுக்கு பிறகு , தொலைதூர கல்வி மூலமாக முடித்தவர்களுக்கு மட்டும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டாம் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது . அதே சமயம் , பகுதிநேரமாக படித்தவர்களை , ரெகுலர் போலவே கணக்கில் கொள்ளலாம் என யூஜிசி வழிகாட்டுதல் தெரிவித்திருந்தது. ஆனால் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மண்டலத்திற்குட் பட்ட ஈரோடு , திருப்பூர் , நீலகிரி , சேலம் , நாமக்கல் , தர்மபுரி , கிருஷ்ணகிரி , கோவை , கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டு தணிக்கை நடந்தது. அப்போது , 2008 ம் ஆண்டுக்கு பிறகு பகுதி நேரமாக எம்பில் ஆய்வு படிப்பில் சேர்ந்து , அதற்கான ஊக்க ஊதியம் பெற்ற சுமார் 800 பட்டதாரி ஆசிரியர்கள் , அதனை திரும்ப செலுத் தும்படி உத்தரவிடப்பட்டது. ஒவ்வொருவரும் 150 ஆயிரம் முதல் 12 லட்சம் வரை திரும்ப செலுத்த வேண்டும் என்பதால் , பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது யூஜிசி வழிகாட்டுதலுக்கு எதிரானது என ஆசிரியர் கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து , இந்த விவ காரம் குறித்து தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் படி , தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் , முதல்வரின் தனிப் பிரிவிற்கு , வேண்டுகோள் மனுவை அனுப்பினார்.

இந்த மனுவை ஏற் றுக் கொண்ட அதிகாரி கள் , கடந்த 2007-2008ம் ஆண்டு முதல் உரிய துறை அனுமதியுடன் , அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பகுதி நேரமாக எம்பில் பட்டம் பெற்றிருந்தால் , உயர்கல்விக்கான இரண்டாவது ஊக்க ஊதியம் பெற தகுதியானவர் என கோவை மண்டல கணக்கு மற்றும் தணிக்கை பொறுப்பு அலுவலருக்கு உத்தர விட்டுள்ளனர். இதனால் , கோவை மண்டலத்தில் 800 ஆசிரியர்கள் மீதான தணிக்கை தடை நீக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள தாக ஆசிரியர்கள் தெரி வித்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459