சித்த மருத்துவம் சூப்பர் : எல்லோருக்கும் கொடுக்க திட்டம் - ஆசிரியர் மலர்

Latest

05/07/2020

சித்த மருத்துவம் சூப்பர் : எல்லோருக்கும் கொடுக்க திட்டம்

சித்த மருந்துகள் நல்ல பலன்களை அளிப்பதாகவும், சென்னையில் உள்ள அனைத்து கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் இதை விரிவுபடுத்தப் போவதாகவும் சென்னை கமிஷ்னர் பிரகாஷ் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கோடம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பிற்கு ஆளானோர் ஜவஹர் கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பிட்ட மையத்தில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் கொரோனாவை வென்று வீடு வெள்ளிக்கிழமை தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டனர்
. வீட்டிற்குப் புறப்பட்டவர்களுக்கு வழியனுப்பும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் சென்னை கமிஷ்னர் பிரகாஷ் கலந்து கொண்டு குணமடைந்தவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சியில் 12 ஆயிரம் களப் பணியாளர் 15 மண்டலங்களிலும் வீடு வீடாக ஆய்வு மேற்கொள்கின்றனர்.
நடத்தப்படும் ஆய்வுகளின்போது அறிகுறி இருப்பவர்கள் கண்டறியப்பட்டுச் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களுக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்த படுகின்றனர்.
இந்த பணியை மேற்கொள்ளும் களப் பணியாளர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சென்னையில் உள்ள கொரோனா மையங்களில், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையினருடன் இணைந்து கூடுதலான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஹோம் கொரன்டைனில் வெளியே சுற்றுபவர்களுக்கு ஆப்பு வைக்க புதிய ஆப் : சென்னை மாநகராட்சி அதிரடி!!
அதேபோல் சிகிச்சை வழங்கப்பட்டு வரும் மையங்களில் அலோபதி மருத்துவத்துடன் சேர்த்து சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சித்த மருத்துவ முறையில் சிகிச்சை வழங்குவது நல்ல பலன்களைக் கொடுப்பதால், பல்வேறு மையங்களுக்குச் சித்த மருத்துவ முறையை விரிவுபடுத்தப் பணிகளைச் செய்து வருகிறோம்.
ஜவஹா் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்தில் இதுவரை 744 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்போது வரை 569 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

சென்னையில் மழைக்காலம் தொடங்கி இருப்பதால் டெங்கு தடுப்பு பணியில் 3 ஆயிரத்து 500 பணியாளர்களை பணியமர்த்தி உள்ளோம். விரைவில் முழுவீச்சில் இந்த பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459