தமிழகத்தில் இன்று மேலும் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4,930, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 55 பேர் உட்பட 4,985 பேருக்கு தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. 50,800 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4,985 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 3,861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 49 பேர், தனியார் மருத்துவமனைகளில் 21 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,551 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 1,298 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 85,859லிருந்து 87,235 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 1,456 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment