தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஆசிரியர் மலர்

Latest

21/07/2020

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.< கொரோனா வைரஸ் பரிசோதனை
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 4,887, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 78 பேர் உட்பட 4,965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 4,894 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,21,776ல் இருந்து 1,26,670 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.  இறப்பு எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது.  அரசு மருத்துவமனைகளில் 48 பேர், தனியார் மருத்துவமனைகளில் 27 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.  வேறுநோய் பாதிப்பு இல்லாத 6 பேர் உயிரிழந்துள்ளனர்.   சென்னையில் கொரோனா உயிரிழப்பு 1,475 ஆக உயர்ந்துள்ளது.   சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனாவிற்கு இதுவரை 1,151 பேர் உயிரிழந்துள்ளனர்.  சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 207, திருவள்ளுரில் 175 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று மேலும் 1,130 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 87,235லிருந்து 88,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 18வது நாளாக 2 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 1,475 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459