தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,756 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று - ஆசிரியர் மலர்

Latest

08/07/2020

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,756 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று



தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,756 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்) தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,756 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1,261 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 64 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 3,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459