கிராமப்புற கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டை உள்ளிட்ட வர்த்தகங்களுக்காக 2000 பேரை பணியமர்த்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு - ஆசிரியர் மலர்

Latest

01/07/2020

கிராமப்புற கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டை உள்ளிட்ட வர்த்தகங்களுக்காக 2000 பேரை பணியமர்த்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு


புதுடில்லி: கிராமப்புற கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டை உள்ளிட்ட வர்த்தகங்களுக்காக 2000 பேரை பணியமர்த்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு எடுத்துள்ளது.
இளநிலை மற்றும் நடுத்தர மட்டத்திலான இந்த நியமனங்கள் அடுத்த 6 மாதங்களில் நடத்தப் படும் என்று கூறப்படுகிறது.
கிராமப்புற வங்கி செயல்பாடுகள், வேளாண் கடன்கள் ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல் கிரெடிட் கார்டு மார்க்கெட்டிங்கில் சிறிய நகரங்களையும் உட்படுத்தும் வகையிலும் இந்த பணிய நியமனம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பளத்தைப் பொறுத்தவரை இளநிலை பணியாளர்களுக்கு மாதம் ரூ 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459